http://thevarkal.blogspot.com/2016/11/blog-post_68.html

Thursday, August 3, 2023

கிராமமும் நகரமும்

கிராமமும் நகரமும்
....

வெற்றிலை_பாக்கு போட்டால் கிராமத்தான்

பீடா போட்டால் நகரத்தான்

பச்சை குத்தினால் கிராமத்தான்

டாட்டூ போட்டு கொண்டால் நகரத்தான்

மருதாணி வைத்துக் கொண்டால் கிராமம்

மெஹந்தி என்றால் நகரம்

மஞ்சள் தண்ணீர் ஊத்தினால் கிராமம்

Chemical பொடி தூவினால் நகரம்

90களில் மஞ்ச பச்சை சட்டை போட்டா அவன் கிராமம்

2015ல் மஞ்சள் பச்சை சட்டை போட்டால் நகரம்

மங்களமான மஞ்சப்பை என்றால் கிராமம்

மண்ணை மலடாக்கும் பாலித்தீன் என்றால் நகரம்



தன் மனைவியை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தால் கிராமம்

மனைவி அவள் நண்பா்களை அறிமுகம் செய்தால் நகரம்

கிழிந்த ஆடை போட்டால் கிராமம்

நல்ல ஆடையை கிழித்து போட்டால் நகரம்

உதவிக்கு மிதிவண்டி இருந்தால் கிராமம்

உடம்பைக் குறைக்க மிதிவண்டி இருந்தால் நகரம்

கோடு போட்ட அண்டர் வேர் தெரிந்தால் அவன் கிராமம்

இடுப்பு ஜட்டி தெரிய பேன்ட் அணிந்தால் அவன் நகரம்

எது நாகரிகம் ? 😏😏😏😏😏

""பசும்பொன் தேவரின் பொன்மொழிகளில் சில""

"ஸ்ரீ தேவர் துணை"

""பசும்பொன் தேவரின் பொன்மொழிகளில் சில""

* #பெண்ணிற்கு உயிர் கற்பு. மனிதற்கு உயிர் மானம். நாட்டிற்கு உயிர் தியாகம்"
 * #பெண்ணாசையால் இராவணனும் மண்ணாசையால் கௌரவர்களும் அழிந்தனர்."

* #வீரமற்ற விவேகம் கோழைத்தனம், விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்"

* #இன்று மாலைக்கு நீட்டுகிற கழுத்து நாளை தூக்கு கயிற்றுக்கும் தயராக இருக்க வேண்டும்"

* #நூறு ஏழைகள் ஒரு பணக்காரனை உண்டாக்குகிறார்கள். ஒரு பணக்காரன் ஆயிரம் ஏழைகளை உண்டாக்குகிறான்."

* #எல்லோரிடத்திலும் தெய்வம் உண்டு. ஆனால் எல்லோரும் தெய்வத்தினிடம் இல்லை."

* #சமயம் வரும்போது யானையை எதிர்க்கும் வீரமும், எறும்பு கடிக்கும்போது வருடிக் கொடுக்கும் குணமும் வேண்டும்."

* #பசி, பட்டினி, இல்லாமை இவைகளைத் தாங்கும் சக்தியை அடையாதவன் அரசியலில் கால் வைக்கக்கூடாது."

* #கல்லூரிகளும், பாடசாலைகளும் பட்டதாரிகளைத் தான் உண்டாக்கும். புத்திசாலிகளை உண்டாக்காது."

* #தேசபக்தன் தேசத்திற்குக் கொடுப்பான். அரசியல்வாதி தேசத்தை பிடுங்குவான்."

* #ஏன் செய்தாய்? என்று கேட்கும் ஆயிரம் தொண்டர்களைவிட என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கிற நூறு தொண்டர்ளே மேல்."

* #இந்த நாட்டில் முயன்ற சுதந்திரம் வேறு. முடிந்த சுதந்திரம் வேறு"
* #ஓங்கார சக்தியின் உட்பொழிவையும் அணையாக் கனவையும் கொண்டது தேசிய பக்தி."

* #தியாகிகள் எல்லாம் கோழைகளல்ல, போக்கிரிகள் எல்லாம் வீரர்களல்ல."

* #சாதியும், நிறமும் அரசியலுக்கு இல்லை. ஆன்மீகத்துக்கும் இல்லை."

* #அன்று மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல். இன்று மந்திரிக்கு அழகு வரும் பொருள் சுருட்டல்."

* #எனக்கு தொண்டனாக அவசியப்படுகிற இடத்தில் தலைவனாக நடக்கத் தெரியும். நடிக்கத் தெரியாது."

* #உண்மையை சொல். உறுதியாய்ச் சொல். இறுதிவரை சொல். அவனே வீரன்."

* #போனால் வராதது இரண்டு. மானமும், மரணமும்"

வாழ்க நேதாஜி புகழ்!!!!!
வாழ்க தேவர் புகழ்!!!!!
ஜெய்ஹிந்த்!!!!!
ஜெய்ஹிந்த்!!!!!