http://thevarkal.blogspot.com/2016/11/blog-post_68.html

Thursday, November 17, 2016

நாட்டுகாக தாங்கிப்போம்

1 லிட்டர் தண்ணீர் 20 ரூபாய்..
யாரும் போராடவில்லை..

மல்டி பிளெகஸ் தியேட்டர்களில்
1/2 லிட்டர் தண்ணீர் 25 ரூபாய்..
யாரும் போராடவில்லை..
புட்டிகளில் அடைக்கப்பட்ட
300 மிலி குளிர்பானத்தின் விலை
70 ரூபாய்..
யாரும் போராடவில்லை..

திரையரங்குகளில்
டிக்கெட் விலையுயர்த்தி
மூன்று நாட்களுக்குள்
கொள்முதலையும் லாபத்தையும்
ஈட்டும் யுத்திக்கு எதிராக
யாரும் போராடவில்லை..

வணிக வளாகங்களில்
ஒரு இட்லி 30 ரூபாய்..
யாரும் போராடவில்லை..
100% விலையுயர்த்தி
30% தள்ளுபடியோடு விற்கும்
துணிக்கடைகளுக்கு எதிராக
யாரும் போராடவில்லை..

ஆதாரமேயில்லாமல்
சேதாரத்திற்கும் சேர்த்து வசூலிக்கும்
நகைக்கடைகளுக்கு எதிராக
யாரும் போராடவில்லை

அநாவசியங்களுக்கு
அதிகமாய்ச் செலவழிப்பவர்கள்
அத்தியாவசியங்களுக்கு
செலவழிக்கத் தயங்குவது
பெருவணிகர்களின் சூத்திரங்கள்
வெற்றி பெற்றிருப்பதன் சாட்சி..

சுருக்குக்கயிறை ஊஞ்சலெனவும்
ஊஞ்சலை சுருக்கெனவும் பார்க்கும்படி
குருடாக்கப்பட்ட சமுதாயமாய் மாறியாயிற்று..

IPHONE வாங்க 5 மணி நேரம் que ல நிப்போம் , எம் ஜி ர், கருணாநிதி, ஜெயலலிதா meeting கு கால் கடுக்க பத்து மணி நேரம்  நிப்போம் , இலவசங்களை வாங்க தினம் தினம் போய் Q ல நிப்போம் , அப்பல்லாம்  பிரச்சினை இல்ல,

தாயாகணும்னா , அந்த சந்தோஷத்தை அனுபவிக்கணும்னா பிரசவவேதனையும், சிசேரியன் வலியையும் ஒரு சில நாள் பொறுத்துக்கணும், நல்ல வேலை கிடைக்கணும், நல்லா வரணும்னா படிகறகாலத்து TV, cricket, Cinema Friends என எல்லாவற்றையும் விட்டு விட்டுதான் படிக்கணும்.

இந்தமாதிரி முடிவ காங்கிரஸ்காரனால் எடுக்கமுடியாது. சிதம்பரம் இப்படி செஞ்சிருந்தா, கார்த்திக் சிதம்பரமும் , ராபர்ட் வத்ராவும் கடலில் குதித்திருப்பார்கள். அப்பழுக்கில்லாத , நேர்மையான ஒரு பிரதமரரும் அரசாங்கமும் தான்  இப்படி ஒரு தீர்க்கமான முடிவ எடுக்கமுடியும்.

ஒரு சில நாள் கஷ்டம் தான் . இப்ப நாட்டுகாக தாங்கிப்போம்
. இதன் பலன் நமக்கு கிடைக்கும் . பல ஆயிரம் கோடி பணம் போன அரசியல்வாதிகளோட அலரல் சத்தம் காதுக்கு இதமா இருக்ல்ல ...

ஊழல்மயமான சமுதாயம் யாருக்கும் நன்மை தராது.வேர்களின் மீது
வெந்நீர் ஊற்றிக்கொண்டு
இலைகள்
செழித்திருக்க முடியாது  ..
-

No comments:

Post a Comment