http://thevarkal.blogspot.com/2016/11/blog-post_68.html

Monday, November 7, 2016

ஒருவன் தற்கொலைக்கு

ஒருவன் தற்கொலைக்கு
முயற்சி செய்யும்போது அவனைப் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்...

நீதிபதி:  ஏன் தற்கொலைக்கு முயற்சி செய்தாய்.. இது குற்றம் என்று உனக்கு தெரியாதா... ???

குற்றவாளி:  எல்லாம் குடும்ப பிரச்சனை தான் காரணம் மை லார்ட்...!

நீதிபதி: யாருக்குத்தான் குடும்பப் பிரச்சனை இல்ல... அப்படி என்னதான் உன் பேமிலி பிராப்ளம்... பொல்லாத பிராப்ளம்... !!???

குற்றவாளி:  கணம் நீதிபதி அவர்களே...
ஏன் சோகக் கதையைக் கொஞ்சம் கேளுங்கள்... 👇👇👇👇

நான் ஒரு விதவையை திருமணம் செய்து கொண்டேன் வீட்டில் யாருக்கும் தெரியாமல்.... 😊😊

ஏற்கனவே அவளுக்கு திருமண வயதில் ஒரு பெண் இருந்தாள்... 😡😡

அந்த பெண்ணை என் தகப்பனார் காதலித்து எனக்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்... 😈😈

அதாவது என் தகப்பனார் எனக்கே மாப்பிள்ளை ஆனார்...! 😀😀

என் தகப்பனாரை திருமணம் செய்து கொண்டதால் என் ஒன்று விட்ட மகள் எனக்கு சித்தி ஆனாள்... 😢😢

காலம் ஓடியது.....

என் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்....

அவன் என் தகப்பனாருக்கு மைய்த்துனன் ஆனான்...😕😕

என் சித்தியின் சகோதரன் ஆதலால் என் மகன் எனக்கு மாமன் ஆனான்...😥😥

என் தகப்பனாரின் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்.அவன் எனக்கு சகோதரன்.... 😢😢

அவனே எனக்கு பேரனும் ஆனான்...😇

என் மகளின் மகன் அல்லவா? 😁😁

அதே போல் என் மனைவி என் பாட்டியானாள்...😂😂

என் சித்திக்கு தாய் அல்லவா? 😊😊

நான் என் மனைவிக்கு கணவனாகவும், பேரப்பிள்ளையாகவும் ஒரே சமயத்தில் இருக்க வேண்டியதாயிற்று... 👌👌

ஒருவனுடைய பாட்டிக்கு கணவனாக இருப்பவன் அவனுக்கு தாத்தா ஆகிறான் அல்லவா? 😥😥

அப்படி பார்த்தால் நான் எனக்கே தாத்தாவாகிறேன்... 😕😕

இக்குழப்பமே என் தற்கொலைக்கு காரணம்...☺☺
.
.
.

நீதிபதி ஓடி சென்று தற்கொலை செய்து கொண்டார்...

😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😢😢😁😁

No comments:

Post a Comment