http://thevarkal.blogspot.com/2016/11/blog-post_68.html

Tuesday, November 8, 2016

ஒரு ஆங்கிலேயரும், ஒரு இந்தியரும் உரையாடி கொள்கிறார்கள்...  இந்தியரைப் பார்த்து ஆங்கிலேயர் கேட்கிறார்.....  ஆங்கிலேயர் : உங்கள் நாட்டில் உள்ள பெண்கள் ஏன் ஆண்களிடம் கை குலுக்க மறுக்கிறார்கள், கை குலுக்குவது அப்படியொன்றும் தவறு இல்லையே.....  இந்தியர் : உங்கள் நாட்டு மகாராணியிடம் உங்கள் நாட்டை சேர்ந்த பாமர மக்கள் கை குலுக்க முடியுமா ?  ஆங்கிலேயர் : அது முடியாதே....  இந்தியர் : ஏன் முடியாது ?  ஆங்கிலேயர் : அவர்கள் எங்கள் நாட்டு ராணி ஆயிற்றே....  இந்தியர் : உங்கள் நாட்டை பொறுத்தவரை ராஜாவின் மனைவி மட்டும் தான் ராணி, ஆனால் எங்கள் நாட்டை பொறுத்தவரை அனைத்து பெண்களும் எங்களுக்கு மகாராணிகள் தான். இந்த பதிலை கேட்டவுடன் ...  ஆங்கிலேயர் வாயடைத்துப் போனார்.... அந்த இந்தியர்  சுவாமி விவேகானந்தர்

No comments:

Post a Comment