http://thevarkal.blogspot.com/2016/11/blog-post_68.html

Sunday, November 6, 2016

தேவர் கவிதை...

நீ என்ன ஏழையோ?
அதனால்தான்  நீ!
கூழி தொழிலாளிகளுக்காக
போராடி சிறைக்கு சென்றாயோ?

நீ என்ன இந்துமதவாதியோ?
அதனால்தான் நீ!
சிறுவயது முதல் முஸ்லிம்
அன்னையால் வளர்கப்பெற்றாயோ?

நீ என்ன சாதியே தலைவனோ?
அதனால்தான் நீ!
அஞ்சாமல் அங்கையற்கண்ணி கோயிலுக்கு
அறிசன மக்களை அழைத்துச்சென்றாயோ?

நிலம் இல்லாமல் தவித்த
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு
உன் நிலத்தை கனிவுடன்
தானமாக தந்தாயோ?

நீ என்ன சுதந்திர போராட்டவீரனோ?
அதனால்தான் உங்களுக்கு!
வெள்ளையன் பயத்தில்
வாய்ப்பூட்டு சட்டம் போட்டானோ?

நீ என்ன தமிழகத்தின் தலைவனோ?
அதனால்தான் உங்களுக்கு!
தமிழகத்தைவிட மேற்குவங்கத்தில்
அதிகசிலை உள்ளதோ?

நீ என்ன உலகத்தலைவனோ?
அதனால்தான் உங்களது!
பெயர் பர்மா முதலிய
நாடுகளில் பரவியுள்ளதோ?

தேசத்தையும்! தெய்வீகத்தையும்!
இருகண்ணாக கொண்ட
ஒரு உலகத்தலைவனையா?
தமிழ்நாட்டிற்குள் அடக்கப் பார்க்கிறார்கள்?

சாதி, மதம் கடந்த
ஒரு தெய்வ திருமகனையா?
ஒரு சாதிக்குள் அடக்கப் பார்க்கிறார்கள்?

உலகத் தலைவனோ! உன்னை
வாழ்த்த வயதில்லை!

2 comments:

  1. Thevar ayya neer vazhka..... engal Ayya umm vazhi naam nadappom.

    Vijay thevan, akhil thevan

    ReplyDelete
  2. Ungal thalaimurai ungalukku nandri solgirom..... thevar in a makkalaga pirandhadharku perumayaga uzhadhu....

    Manju thevar, dhekshana thevar

    ReplyDelete