http://thevarkal.blogspot.com/2016/11/blog-post_68.html

Sunday, November 6, 2016

தேவர் ஐயாவை பற்றி ஜெர்மனி பள்ளிக்கூடங்களில்

இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த நேரம்.  நேதா
ஜி அவர்கள் ஹிட்லரை பார்க்க ஜெர்மனியில் உள்ள அவரின் ரகசிய வீட்டிற்கு சென்றிருந்தார்.  உள்ளே சென்றவுடன் அங்கு பத்து ஹிட்லர்கள் இருந்தனர்.  ஆனால் நேதாஜியோ நேராக ஹிட்லரின் ரிசப்னிஸ்ட்டிடம் சென்று ஹிட்லர் எப்போது வருவார் என்று கேட்க, ரிசப்னிஸ்ட் புன்முறுவலுடன் கொஞ்சம் வேலையாக வெளிய சென்று இருக்கிறார், இப்போ வந்து விடுவார் என்று கூறி நேதாஜியை அங்கு இருக்கும் மஞ்சள் நிற சோபா செட்டில் அமர சொன்னார்.

போர்முனையில் இருந்த ஹிட்லருக்கு உடனடியாக நேதாஜி வருகையை பற்றி தகவல் போக, ஹிட்லரோ போரை அப்படியே pause செய்துவிட்டு அடித்துபிடித்து வீடு திரும்பினார்.  அங்கு அமர்ந்து இருக்கும் நேதாஜி பின்னால் போய் நேதாஜியின் தோளில் கைவைத்தார். நேதாஜி திரும்பிக்கூட பார்க்காமல், "ஹலோ ஹிட்லர் ,ஹாவ் ஆர் யு?" என்று கேட்க ஹிட்லருக்கு மயக்கமே வந்துவிட்டது. பிறகு ஹிட்லர் நிதானமாக, "நீங்கள் இங்கு வந்தவுடன் என்னை போல் பத்து பேர் இருந்திருப்பார்கள்.  பிறகு எப்படி நான் வெளியில் சென்று இருக்கிறேன் என்று உங்களுக்கு தெரியும்?" என்று கேட்டார்.

நேதாஜி  மிக நிதானமாக, "நான் உங்களை ஒரு போட்டோவில் பார்த்து இருக்கிறேன்.  அந்த ஃபோட்டோவில் எப்போதுமே உங்களுடன் ஒரு ஜெர்மன் ஷெப்பேர்ட் நாய் இருந்தது.  இரவு நேரங்களில் அந்த ஃபோட்டோவை பார்த்தாலும் அந்த நாய் நகராமல் அப்படியே இருந்தது.  ஆனால் அந்த பத்து பேரில் ஒருவரிடம் கூட ஒரு நாய் கூட இல்லை.  அப்போதே எனக்கு தெரிந்துவிட்டது நீங்கள் இங்கு இல்லை என்பது," என்றார்.  இதை கேட்டு மலைத்துப்போன ஹிட்லர், அடுத்த நொடியில் ஆர்வம் தாங்காமல், "சரி, அப்போ உங்கள் தோளில் கைவைத்தவுடன் திரும்பிக்கூட பார்க்காமல் நான்தான் என்று எப்படி தெரிந்தது?" என்று கேட்க, நேதாஜி சிரித்துகொண்டே" என் தோள் மேல் கைவைப்பதற்கு உங்களை தவிர யாருக்கு தைரியம் இருக்கு?" என்றார்.  "அப்படியா? மீறி உங்கள் தோளில் கைவைத்தால் என்ன செய்வீர்கள்?"என கேட்டார் ஹிட்லர்.  "நான் எதுவும் செய்ய மாட்டேன்.  ஆனால் என்மீது யாராவது கை வைத்தால் என் தளபதி முத்துராமலிங்க தேவன் சும்மா விட மாட்டான்.  அது ஹிட்லர் என்றாலும் சரி ஈசன் என்றாலும் சரி," என்று சொன்னார்.

மனம் நெகிழ்ந்த ஹிட்லர், தேவர் ஐயாவை பற்றி மணிக்கணக்கில் நேதாஜியிடம் கேட்டு தெரிந்து கொண்டு , எனக்கு மட்டும் தேவர் ஐயாவை போல் ஒரு தளபதி இருந்திருந்தால் உலகையே வென்று இருப்பேன் என்று சொல்லி நேதாஜியை வாழ்த்தினார்!  ஹிட்லர் படைக்கு ஒருவார காலம் தேவர் ஐயாவின் வீர ஆவேச உரைகள் போட்டுக் காண்பிக்கப்பட்டன.  இந்த நிகழ்விற்கு பிறகே தேவர் ஐயாவை பற்றி ஜெர்மனி பள்ளிக்கூடங்களில்  எல்லாம் பாடம் வந்தது... இந்த வரலாற்று குறிப்புகளை ஹிட்லர் தனது வாழ்க்கை குறிப்பு புத்தகமான "மெய்ன் கேம்ப்"ல் எழுதி இருக்கிறார்.  ஆனால் இந்திய அரசாங்கமோ இதுபோன்ற மாமனிதர்களை இருட்டடிப்பு செய்துவிட்டு நமக்கு உண்மையான வரலாறை தெரியவிடாமல் செய்கிறது என்பது #நம்மில்_எத்னி_பேருக்கு_தெரியும் ?

No comments:

Post a Comment